பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டம் சேனானி நகரில் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான குகைப் பாதையை, நாளை அவர் திறந்து வைக்க உள்ளார்.
இந்த குகைப் பாதை 9.2 கிலோமீட்டர் வரை நீளம் கொண்டது. கடந்த 2011ம் ஆண்டு மே 23ம் தேதி தொடங்கியது. 3,700 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட இந்த குகைப்பாதை 2016-ம் ஆண்டு மே மாதம் திறக்கப்பட இருந்தது.
ஆனால் பல்வேறு காரணங்களால் தாமதமானது. இந்நிலையில் நாளை இது திறக்கப்பட உள்ளது. இதற்காக காஷ்மீர் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
0 Comments