தற்கொலை முயற்சி கிரிமினல் குற்றம் இல்லை: நாடாளுமன்றத்தில் சட்டமசோதா நிறைவேற்றம்

புதுதில்லி: தற்கொலைக்கு முயற்சிப்பவர்களை மன நல பாதிப்புக்குள்ளா னவர்களாகக் கருதி, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வகை செய்யும் "மன நல பாதுகாப்பு மசோதா', நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.
இந்தியத் தண்டனையியல் சட்டப்படி, இதுவரை தற்கொலைக்கு முயலுவது குற்றச் செயலாக கருதப்பட்டு வந்தது.
இதை மாற்றி தற்கொலைக்கு முயலுவோரை, மன நலம் பாதிக்கப்பட்டவராகக் கருதி, அவர்களுக்கு உரிய மனநல சிகிச்சையும், பாதுகாப்பையும் அளிப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் புதிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா, மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Close Menu