உலகம் முழுவதும் மின் விளக்குகளை அணைத்து பூமி நேரம்(மார்ச் 25) அனுசரிப்பு

சென்னை: உலகம் முழுவதும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமை பூமி நேரம் அனுசரிக்கப்படுகிறது. உலக இயற்கை நிதியம் சார்பில் நடத்தப்படும் அந்த வகையில் இன்று 10-வது பூமி நேரம் அனுசரிக்கப்பட்டது. உலகம் முழுவதும் 172 நாடுகளில் உள்ள சுமார் 7000 நகரங்கள் இதில் பங்குபெற்றன. இரவு இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரையிலான ஒரு மணி நேரம் அத்தியாவசியமானதை தவிர்த்து மற்ற மின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன.
ஆஸ்திரேலியாவின் சிட்னி ஓபரா ஹவுஸ், ஹார்பர் பாலம், லூனா பார்க், சிட்னி டவர் ஐ உள்ளிட்ட முக்கியமான கட்டிடங்களில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. மக்கள் கூடும் முக்கிய பகுதிகளில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சென்னையில் பெசன்ட் நகர் கடற்கரையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பூமியில் ஏற்படும் தட்பவெப்ப நிலை மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும் இந்த மாற்றத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் பூமி நேரம் கடைபிடிக்கபடுகிறது.
இந்நிகழ்ச்சியின்போது, அத்தியாவசியமான மின் விளக்குகள் தவிர மற்ற அனைத்து விளக்குகளையும் அணைக்கப்படும். இதனால் மின் ஆற்றல் சேமிக்கப்படுவதுடன், ஒளிசார் மாசடைதலும் குறைய வழி வகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Close Menu